பணியிழப்பு நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஏர்செல் ஊழியர்கள் போராட்டம்

திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ள ஏர்செல் நிறுவனம், உரிய பணியிழப்பு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவையில் அதன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை: திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ள ஏர்செல் நிறுவனம், உரிய பணியிழப்பு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவையில் அதன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் சுமார் 8 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனம் சமீபகாலமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வந்தது. தங்கள் நிறுவனத்தின் டவர்கள் இல்லாத பகுதியில் வாழும் சந்தாதாரர்களுக்கு தொலைத்தொடர்பு இணைப்பு வழங்கிவந்த வோடாபோன், ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு உரிய நேரத்தில் செலுத்த வேண்டிய பாக்கி தொகையை செலுத்தாதால் ஏர்செல்லுக்கு அளித்துவந்த மாற்று வசதியை அந்நிறுவனங்கள் நிறுத்தி விட்டன. இதனால், தமிழகம் உள்ளிட்ட நாட்டின் சில மாநிலங்களில் வாழும் ஏர்செல் சந்தாதாரர்கள் சமீபத்தில் கடும் அவதிக்குள்ளாகினர். 

இதனிடையே, தங்களை திவால் ஆன நிறுவனமாக அறிவிக்க வேண்டும் என தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனம் மனு செய்துள்ளது. இந்த மனு நாளை (மார்ச் 07) விசாரணைக்கு வர இருக்கிறது. 

இந்த நிலையில், கோவை மாவட்டம் ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள ஏர்செல் தமிழக தலைமை அலுவலகத்தில் அதன் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது, அவர்கள் கூறியதாவது, எந்தவித முன்னறிவிப்பின்றி ஏர்செல் நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கக்கோரி தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். நிறுவனத்தின் நிலைமை குறித்து எந்த விவரமும் ஊழியர்களுக்கு தெரிவிக்காமல், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றே கூறி வருகின்றனர். ஆனால், ஏர்செல்லின் இந்த நடவடிக்கையால் சுமார் 30,000 ஊழியர்கள் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். 

எனவே, நீண்ட காலமாக பணியில் இருந்த ஊழியர்கள், ஒப்பந்தம் அடிப்படையில் வேலை செய்த பணியாளர்களுக்கு பணியிழப்பு நிவாரணம் வழங்க வேண்டும், இ.எஸ்.ஐ., பிஃஎப் போன்ற பிடித்தத் தொகைகளை வழங்க வேண்டும். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...