ஈ.வே.ரா., சிலை குறித்த சர்ச்சை பதிவு : எச். ராஜாவிற்கு வைகோ பகிரங்க எச்சரிக்கை

சிலை உடைப்பு சம்பந்தமாக முகநூல் பக்கத்தில் ஹெச்.ராஜா தெரிவித்த கருத்துக்கு, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

சிலை உடைப்பு சம்பந்தமாக முகநூல் பக்கத்தில் ஹெச்.ராஜா தெரிவித்த கருத்துக்கு, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா இன்று காலை தன்னுடைய முகநூல் பக்கத்தில், திரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வே. ராமசாமி சிலை எனப் பதிவிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், சமூக வலைதளத்தில் வார்த்தை போர் நடத்தி வருகின்றனர். 



இந்த நிலையில், ஈரோட்டில் ம.தி.மு.க,.வின் 26-வது மாநிலப் பொதுக்குழுவில் இருந்த வைகோ, இந்தத் தகவலையறிந்து, எச். ராஜாவை கடுமையாக சாடிப் பேசினார். நிர்வாகி ஒருவர் மேடையில் பேசிக்கொண்டிருக்க, அவரை இடைமறித்து மைக்பிடித்த வைகோ, "பெரியார் சிலையை உடைப்பேன்னு ஒருவர் சொல்லியிருக்கார். அவருக்கு நான் சவால் விடுக்கிறேன். தமிழ்நாட்டுல எந்தப் பகுதியில வேணும்னாலும் வச்சிக்கலாம். தைரியம் இருந்தால் சிலை உடைக்க நாள் குறிச்சிட்டு வாங்க. அப்படி வர்றவங்களோட கை, கால் துண்டாக்கப்படும். இந்தக் கை அரிவாள் பிடித்த கை. மோடியின் முப்படையும் வந்தாலும் அதை சந்திக்க நான் தயார்" என ஆக்ரோஷமாகப் பேசிவிட்டு அமர்ந்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...