சிலை உடைப்பு சம்பவங்களில் ஈடுபடும் பா.ஜ.கவினர் மீது கடும் நடவடிக்கை: அமித்ஷா எச்சரிக்கை

தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவதில் பா.ஜ.க.வினருக்கு தொடர்பு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவதில் பா.ஜ.க.வினருக்கு தொடர்பு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது :- ஒரு கட்சி என்ற முறையில், பறந்த அளவிலான கருத்துக்கள் மற்றும் கொள்கைகளை இந்தியாவில் இணைத்துக்கொள்ள முடியும் என்று நாங்கள் பா.ஜ.க.,வை நம்புகிறோம். நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் நம் பெரிய தேசத்தை எப்படிக் கருதினார்கள் என்பதுதான் இது. சிலைகளை அழிப்பதில் சமீபத்திய பிரச்சினை மிகவும் துரதிர்ஷ்டமானது. யாரும் சிலைகளை சேதப்படுத்துவதில் நாங்கள் ஒரு கட்சியாக ஆதரிக்கவில்லை. மக்களுடைய வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுவதே எங்கள் முக்கிய நோக்கம். இந்தியாவில் உள்ள எல்லா மக்களுக்கும் எங்களது பணி மற்றும் செயல்பாடுகள் பெரிதும் பாராட்டை பெற்று உள்ளன. எங்கள் கூட்டணி அரசாங்கம் 20 மாநிலங்களில் சேவை செய்து வருகிறது.

தமிழ்நாடு மற்றும் திரிபுரா ஆகிய மாநில கட்சி தொண்டர்களுக்கும் கூறிக்கொள்கிறேன். பா.ஜ.க. தொடர்புடைய எந்த நபரும் சிலைகளை சேதப்படுத்துவதில் தொடர்பு இருப்பதாகக் கண்டறிந்தால் கட்சியில் இருந்து கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...