எச்.ராஜா வழிகாட்டுதலின் பேரில் சிலை உடைக்கப்பட்டிருந்தால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்கலாம் - பா.ஜ.க. பிரமுகர்

எச்.ராஜா வழிகாட்டுதலின் பேரில் பெரியார் சிலை உடைக்கப்பட்டிருந்தால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்கலாம் என்று தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை: எச்.ராஜா வழிகாட்டுதலின் பேரில் பெரியார் சிலை உடைக்கப்பட்டிருந்தால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்கலாம் என்று தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

கோவை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பா.ஜ.க. மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

பின்னர், செய்தியாளர்களிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், " வன்முறையை யார் தன் கையில் எடுத்தாலும் தவறு. வன்முறையை ஆதரிப்பது பா.ஜ.க.வின் கொள்கை அல்ல. இதனைச் செயல்படுத்தியவர்கள் மீதும், இச்சம்பவத்திற்கு மூளையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

கடந்த வாரம், தமிழத்தில் தீவிரவாதம் அழியவில்லை என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். அதற்கு, துணை முதலமைச்சர் கண்டனம் தெரிவித்தார். ஆனால், தற்போது நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அதனை நிரூபித்துள்ளது.

இத்தகையவர்கள் மீது வாக்கு வங்கிகளுக்காகத் தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்துடைப்புக்காக சிலரை கைது செய்து வழக்கை முடிக்காமல், ஒட்டுமொத்த சதியை வெளிக்கொண்டு வந்து அனைவரையும் கைது செய்ய வேண்டும். 

எச்.ராஜா கூறித்தான் பெரியார் சிலை உடைக்கப்பட்டது என்றால், அவர் மீதும் நடவடிக்கை எடுக்கலாம்." என்றார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...