அரசியலுக்கு வர தயங்க மாட்டோம்- பெந்தெகொஸ்த் சபை பொது செயலாளர்

தேவைப்பட்டால் முஸ்லீம் தோழர்களுடன் இணைந்து அரசியலுக்கு வர தயங்க மாட்டோம் என்று பெந்தெகொஸ்த் சபையின் அகில இந்திய பொது செயலாளர் கூறியுள்ளார்.

நீலகிரி: தேவைப்பட்டால் முஸ்லீம் தோழர்களுடன் இணைந்து அரசியலுக்கு வர தயங்க மாட்டோம் என்று பெந்தெகொஸ்த் சபையின் அகில இந்திய பொது செயலாளர் கூறியுள்ளார். 

நீலகிரியில் கிறிஸ்துவ வழிப்பாட்டு தலங்களை மூட சில அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் போலீசாரை கண்டித்து உதகையில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. 



இக்கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்திலுள்ள கிறிஸ்துவ ஜெப வழிபாடு கூடங்களை நடத்த விடாமல் தடுக்கும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. 

தொடர்ந்து, மத நல்லிணக்கத்திற்கு விரோதமாகவும், செயல்படும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கிறித்துவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து பெந்தெகொஸ்த் சபையின் அகில இந்திய பொது செயலாளர் கே.பி.எடிசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சிறுபான்மையினர் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது. தமிழகத்தில் பெரியார் சிலையை அகற்றுவேன் என்று எச்.ராஜா கூறியது கண்டனத்துக்குரியது. தேவைப்பட்டால் முஸ்லீம் தோழர்களுடன் இணைந்து அரசியலுக்கு வர தயங்க மாட்டோம்." என்றார். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...