குட்டையில் குளிக்கச் சென்றவர் தண்ணீரில் மூழ்கி பலி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள குட்டையில் குளிக்கச் சென்றவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள குட்டையில் குளிக்கச் சென்றவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

காஞ்சிபுரம் மேட்டுத்தெருவை சேர்ந்த பெருமாள், ஜெயா ஆகியோரின் மகன் ஆனந்தன் (40) என்பவர் பல்லடம் அருள்புரம் பாச்சாங்காட்டுப்பாளையம் ஜி.பி தோட்டத்தில் ஒருவருடமாக தங்கி பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் மூன்று மணிக்கு விட்டில் இருந்து  வெளியே சென்றவர், இன்று காலை வரை வீடு திரும்பவில்லை. இதனால், அவருடைய உறவினர்கள் கடந்த மூன்று நாட்களாக அவரைத் தேடி வந்த நிலையில், இன்று காலை பாச்சாங்காட்டுப்பாளையம் குட்டை தண்ணீரில் ஆனந்தனின் சடலம் மிதந்து கொண்டிருப்பதாக தகவல் வந்தது. 

இதனைக் கண்ட பொதுமக்கள் ஆனந்தனின் வீட்டிற்கும், பல்லடம் போலீசாருக்கும் தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஆனந்தனின் சடலத்தை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் பல்லடம் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....