'தமிழ் மொழியை சனியன் என்று பெரியார் கூறியுள்ளார்': அடுத்த சர்ச்சையை கிளப்பும் எச்.ராஜா

தமிழ் மொழியை பெரியார் சனியன் என்று கூறியதாக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறி மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழ் மொழியை பெரியார் சனியன் என்று கூறியதாக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறி மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 

சர்ச்சைகளை கிளப்பி வன்முறையை தூண்டும் விதமாக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தொடர்ந்து பேசி வருகிறார்.

பெரியார் சிலை தொடர்பான அவரது கருத்துக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதைத்தொடர்ந்து தனது சமூக வலைதள பதிவை நீக்கிய எச். ராஜா, தன்னுடைய அனுமதியின்றி தனது அட்மின் அந்த கருத்தை பதிவிட்டதாகக் கூறி வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில் ஒட்டன்சத்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ் மொழியை தந்தை பெரியார் சனியனே என்று கூறியுள்ளார். இதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. தமிழ் என்ற மொழியே இருக்கக்கூடாது என்று தமிழர் மீது திணிக்கப்பட்டது தான் திராவிடம். இந்த உண்மைகள் மக்களுக்கு தெரியும் போது அதற்கான தாக்கம் ஏற்படுவதால் திராவிட கட்சிகள் வசை பாடுகின்றனர்", என்று அவர் கூறினார். 

இந்த சூழலில், தொடர்ந்து சர்ச்சைகளை கிளப்பி தமிழகத்தில் வன்முறையை தூண்டிவரும் எச்.ராஜாவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...