நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுக்கும் சிலை விவகாரம் : கேரளாவில் காந்தியின் சிலை மர்ம நபர்களால் சேதம்

கேரள மாநிலம் கன்னூரில் மகாத்மா காந்தி சிலை மீது மர்ம நபர்கள் கற்கள் வீசியதில், சிலை சேதம் அடைந்துள்ளது.


கேரள மாநிலம் கன்னூரில் மகாத்மா காந்தி சிலை மீது மர்ம நபர்கள் கற்கள் வீசியதில், சிலை சேதம் அடைந்துள்ளது. 

திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தின் நீட்சியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்படும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. சிலைகள் உடைக்கப்படும் சம்பவத்துக்கு பிரதமர் மோடி தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகமும் மாநில அரசுகள் சிலைகள் அவமதிக்கும் சம்பவம் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை வேண்டும் எனவும், இந்தக் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், கேரள மாநிலம் கன்னூரில் மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. கன்னூர் மாவட்டம் தலிபரம்பா பகுதியில் இருந்த மகாத்மா காந்தியின் சிலை மீது கற்கள் வீசப்பட்டன. இதில், சிலை சேதம் அடைந்தது. இன்று அதிகாலை இந்தச் சம்பவம் நடைபெற்றதாகத் தெரிகிறது. இதையடுத்து, சிலையைச் சேதப்படுத்திய மர்ம நபர்களைப் பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....