மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் - காவல் ஆணையர்

மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் என்று கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் பெரியய்யா கூறியுள்ளார்.

கோவை: மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் என்று கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் பெரியய்யா கூறியுள்ளார். 



ஏழ்மையாலும் போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் பெரும்பாலான ஏழை எளிய பெண்கள் மாதவிடாய் காலத்தில் நாப்கின்களை பயன்படுத்துவதில்லை. இந்த நிலையில், பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்த அமைப்புகள் இணைந்து புதிய முயற்சியை மேற்கொண்டுடனர். அதன்படி, சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் மற்றும் தஸ்யா அமைப்புடன் இணைந்து கோவை அரசு மருத்துவமனையில் நாப்கின் வழங்கும் இயந்திரத்தை அமைத்தனர். மேலும், காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் மற்றும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையங்களில் இந்த நாப்கின் வழங்கும் இயந்திரங்களை அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த நாப்கின் ரூ.5-க்கு வழங்கப்படும் என்றும், அவ்வாறு வசூலிக்கப்படும் தொகை பெண்களின் மேம்பாட்டு வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்று அந்த அமைப்பினர் கூறினார். 

இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், மாநகர காவல் துறை ஆணையாளர் பெரியய்யா ஆகியோர் கலந்து கொண்டனர். 



நிகழ்வில் காவல் துறை ஆணையாளர் பெரியய்யா பேசுகையில், "மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும். தாய்மை பெண்ணின் பெருமை. மாதா பிதா குரு தெய்வம் என்ற வாழும் தெய்வங்களில் தாய் என்ற பெண்ணே முதலானவள். செவிலியர்கள் தாய் போன்றவர்கள். இம்மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் அன்னை தெரசா போல சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்." என்றார்.



தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனை முதல்வர் அசோகன் பேசுகையில், "பெண் சிசு கொலைகளைத் தடுக்க கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தைகளின் பாலினம் சொல்ல அரசு தடை விதித்து உள்ளது. அதேபோல், தொட்டில் குழந்தை திட்டம் மூலமும் பெண் குழந்தைகளை அரசு பாதுகாத்து வருகிறது. தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. என்றார்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...