நீலகிரியில் மீன் வலையில் சிக்கிய பாம்பு உயிருடன் மீட்பு

உதகை அருகே விவசாய நிலத்தில் வேலிக்காக அமைக்கப்பட்டிருந்த மீன் வலையில் சிக்கிய பாம்பு வனத்துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டது.

நீலகிரி : உதகை அருகே விவசாய நிலத்தில் வேலிக்காக அமைக்கப்பட்டிருந்த மீன் வலையில் சிக்கிய பாம்பு வனத்துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டது. 



நீலகிரி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு மலை காய்கறிகளான கேரட், பிட்ரூட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இப்படி பயிரிடப்படும் காய்கறிகளை அடிக்கடி வனவிலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பயிர்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள விவசாய நிலங்களில் முள் வேலிகள் மற்றும் மின் வேலிகள் மற்றும் மீன் வலைகளை விவசாயிகள் அமைத்து வருகின்றனர்.

இந்நிலையில், உதகை அருகேயுள்ள அத்திக்கள் என்னும் கிராமத்தில் ஒரு குடியிருப்பு அருகே சாரை பாம்பு ஒன்று மீன் வலையில் சிக்கியுள்ளதாக வன பாதுகாவலருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற வன பாதுகாவலர் சாதிக் மீன் வலையில் சிக்கியிருந்த பாம்பை உயிருடன் மீட்டார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், "சிறு வன விலங்குகளிடமிருந்து விவசாய நிலங்களைப் பாதுகாக்க இதை போன்ற மீன் வலைகளை விவசாயிகள் அமைத்து வருகின்றனர். இதில் சிக்கி சிறு வன விலங்குகள் இறக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, விவசாயிகள் இதைப் போன்று மீன் வலைகளை வேலிகளில் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்." என்றார்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...