கஞ்சா விற்ற இருவருக்கு 3 மற்றும் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை : கோவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கோவையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதவர்களுக்கு தலா 3 ஆண்டுகளும், காரில் கஞ்சா கடத்தியவருக்கு தலா 10 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை : கோவையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதவர்களுக்கு தலா 3 ஆண்டுகளும், காரில் கஞ்சா கடத்தியவருக்கு தலா 10 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கோவை உக்கடம் பைபாஸ் ரோடு ரயில்வே மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்பனை ஜோராக நடப்பதாக உக்கடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு, ஒருசிலர் வாலிபர்கள் பையில் வைத்து கஞ்சாவை விற்பனை செய்து வந்தனர். போலீசார் வருவதையறிந்த அவர்கள், அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். துரத்திச் சென்று போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தவர்களை மடக்கி பிடித்தனர். 

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஜி.எம். நகரைச் சேர்ந்த ஐயூப் (28), ஹரிதாஸ் (28) மற்றும் மதுக்கரையை சேர்ந்த சாகுல் அமீது (30) என்பது அவர்கள் பெயர் எனத் தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ. 21 ஆயிரத்து 380 ரொக்கப் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, மூவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கோவை போதைப்பொருள் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி குணசேகரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ஐயூப் மற்றும் ஹரிதாஸ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். சாகுல் அமீது மீதான குற்றம் நிருபிக்கப்படாததால், அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இதேபோல, கோவையை அடுத்த பேரூர் வழியாக காரில் 21 கிலோ கஞ்சாவை கடத்தி சென்றதாக தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே பாப்பம்மாள் புரத்தைச் சேர்ந்த சுப்ரமணி மகன் மோகன்தாஸ் (30) கைது செய்யப்பட்டார்.  இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மோகன்தாஸை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கோவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கஞ்சா கடத்திய குற்றத்திற்காக மோகன்தாசுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....