அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து : 3 பேர் பலத்த காயம்

திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் மினிவேன் உட்பட நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பூர் : திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் மினிவேன் உட்பட நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 



திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து மினிவேனில் அருண்மொழி மற்றும் சிவக்குமார் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். திருச்சியிலிருந்து கோவைக்கு காரில் திருச்சியைச் சேர்ந்த எழிலரசன் என்பவர் வந்து கொண்டிருந்தார். மாதப்பூர் அருகே திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த  கார் எதிரே வந்து கொண்டிருந்த மினிவேனில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மினிவேன் கவிழ்ந்து, பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு கார் மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. 

இந்த விபத்தில், காரில் வந்த எழிலரசன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மினிவேனில் பயணித்த அருண்மொழி மற்றும் சிவக்குமாருக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்துக்குள்ளானதால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...