காவிரி விவகாரத்தில் சட்ட நிபுணர்கள் ஆலோசனைப்படி நடவடிக்கை - சித்தராமையா

காவிரி விவகாரத்தில் சட்ட நிபுணர்கள் ஆலோசனைப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் சட்ட நிபுணர்கள் ஆலோசனைப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. பா.ஜ.க, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தின.

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு செய்தவற்காக சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தவும், நாளை காவிரி வாரியம் குறித்து அமைக்கப்பட்டுள்ள 4 மாநில பிரதிநிதிகள் கொண்ட குழுவில் தங்கள் நிலைப்பாட்டை வெளிபடுத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

கூட்டம் முடிந்த பின்னர் முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், “காவிரி மேலாண்மை வாரியத்தின் செயல்பாடுகள் என்ன? என்பது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் தெளிவாக கூறப்படவில்லை. சட்ட நிபுணர்கள் தரும் ஆலோசனைப்படி காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....