'வெட்டிங் வாவ்ஸ்': திருமண தொழில் பெண் சாதனையாளர் விருதுகள்

'வெட்டிங் வாவ்ஸ்' பத்திரிக்கை சார்பில் திருமண தொழில் பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி கோவையில் நேற்று நடைபெற்றது.


கோவை: 'வெட்டிங் வாவ்ஸ்' பத்திரிக்கை சார்பில் திருமண தொழில் பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி கோவையில் நேற்று நடைபெற்றது. 



கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நேற்று மாலை 'வெட்டிங் வாவ்ஸ்' பத்திரிக்கை சார்பில் திருமண தொழில் பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மகளிர் தினவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருமண தொழிலில் சாதனை படைத்த திருமண திட்டமிடல், அலங்காரம், சமையல், ஆடை வடிவமைப்பு, போட்டோகிராபர் மற்றும் மெகந்தி போடுபவர்கள் போன்ற 9 வகையான துறைகளில் சாதித்த பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது.

இந்த பெண்களை தேர்வு செய்யும் குழுவில் முன்னாள் உலக அழகி ஜெயா மகேஷ், பார்க் கல்வி குழுமங்களின் தலைமை செயல் அலுவலர் அனுஷா ரவி, வருமான வரித்துறை துணை ஆணையர் காஞ்சனா ராணி மற்றும் நித்யானந்தினி மனோகரன் ஆகியோர் வெற்றியாளர்களைத் தேர்வு செய்தனர்.

இதில் வளரும் தொழில்துறையினர் விருது ரேஷ்மா ஸ்ரீஜெய்க்கும் திருமண திட்டமிடுதல் விருது ஐனஸ் நானிகிற்கும் வழங்கப்பட்டது. சிறந்த திருமண புகைப்பட கலைஞர் விருது நிக்கிதா குமாரன் என்பவருக்கும், சிறந்த திருமண திட்டமிடல் விருது நித்யா-வுக்கும், சிறந்த அலங்கார விருது வைஷ்ணவி அரவிந்திற்க்கும் வழங்கப்பட்டது.



மேலும், சிறந்த சமையல் கலைஞர் விருது கீதாவிற்கும், மெகந்திகான விருது சரண்யாவிற்கு வழங்கப்பட்டது. சிறந்த கேக் தயாரிப்பிற்கான விருது சஹானா லக்‌ஷ்மி என்பவருக்கும், சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது பங்காருப்ரியா என்பவருக்கும், சிகை அலங்காரம் விருது விவேதா தினேஷ் மற்றும் சிறந்த அழைப்பிதழ் விருது ஹரிணிக்கும் வழங்கப்பட்டது. 

இது குறித்து விழாவின் ஒருங்கிணைப்பாளர் தக்‌ஷணாமூர்த்தி கூறுகையில், "திருமண நிகழ்வுகளில் தற்போது பெண்கள் முதுகெலும்பாகத் திகழ்ந்து வருகின்றனர். கற்பனை திறன் கொண்டு புதுமை படைத்து வருகின்றனர். திருமண தொழில் சாதனையாளர்களின் கடின உழைப்பை கவுரவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது." என்றார்.



விருது வழங்கும் விழாவினை தொடர்ந்து கோவை நகரின் ஆடை வடிவமைப்பு பேஷன் ஷோ நடைபெற்றது. மேலும், இந்த ஆண்டின் சிறந்த மணமகள், மணமகன், சிறந்த ஜோடிகள் சிறந்த திருமணம் உள்ளிட்டவற்றுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், புதிய தொழில் முனைவோர் ஏராளமானோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.



Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...