வறட்சியை எதிர்கொள்ள வன விலங்குகளுக்கு தண்ணீர் வழங்கும் பணி தீவிரம்

கோவை வனப்பகுதியில் ஏற்பட்டுவரும் வறட்சியை எதிர்கொள்ளும் வகையில் வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது வனத்துறை.

கோவை: கோவை வனப்பகுதியில் ஏற்பட்டுவரும் வறட்சியை எதிர்கொள்ளும் வகையில் வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது வனத்துறை. 

இது குறித்து மாவட்ட வன அலுவலர் என்.சதீஷ் கூறுகையில், "கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 105 தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு அதில் தண்ணீர் நிரப்பும் பணியை மேற்கொண்டு வருகிறோம்.

இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இதனை முறையாக பராமரித்து வருகின்றனர். வறட்சியின் போது வன விலங்குகள் காட்டுப் பகுதியை விட்டு வெளியேறாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருப்பதற்காகவும், சீதோஷன நிலை சீராக இருக்கவும், முதற்கட்டமாக பத்து ஹெக்டேர் நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. கோடை மழை கிடைக்கும் வரையில் தொட்டிகளில் சேகரிக்கப்படும் தண்ணீர் வன விலங்குகளுக்குப் பயன்படும். இந்த கோடை மழை 130 மில்லி மீட்டர் வரை மழையைத் தரும் என்று வேளாண் பலகலைக்கழகம் கணித்துள்ளது. இருந்த போதும் வரு மே மாதம் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும், 38.5 டிகிரி வரை வெப்பம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே தேவையான பணிகளை வனத்துறை மேற்கொண்டு வருகிறது." என்றார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...