குட்டை நீரில் மூழ்கி பள்ளி மாணவன் உட்பட இருவர் பலி

பல்லடம் அருகே ஆறாக்குளம் குட்டையில் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் உட்பட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: பல்லடம் அருகே ஆறாக்குளம் குட்டையில் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் உட்பட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். அப்பகுதியிலுள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவரது நண்பர் மூவேந்தர்.

இந்நிலையில், நேற்று அவர்கள் இருவரும் விளையாடுவதற்காகச் சென்றனர். ஆனால், மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் இருவரையும் தேடி கொண்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து, பல்லடம் அருகேயுள்ள ஆறாக்குளம் குட்டையில் இன்று காலை இருவரின் சடலம் மிதப்பதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற, பல்லடம் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் இருவரது சடலங்களையும் மீட்டனர்.



விசாரணையில் இறந்தது பள்ளி மாணவர் ஜெயபிரகாஷ், மற்றும் அவரது நண்பர் மூவேந்தர் என்பது தெரிய வந்தது.

மாணவர்கள் மீன்பிடிக்கச் சென்ற போது நீச்சல் தெரியாமல் குட்டையில் விழுந்து உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். குட்டையில் மூழ்கி இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...