செய்தி எதிரொலி: முடங்கிப் போன தாய்-சேய் ஊர்தி சேவை மீண்டும் உயிர் பெற்றது

பொள்ளாச்சியில் முடங்கிப்போன தாய்-சேய் ஊர்தி சேவை மீண்டும் உயிர் பெற்று இயங்கத் தொடங்கியது.

கோவை: பொள்ளாச்சியில் முடங்கிப்போன தாய்-சேய் ஊர்தி சேவை மீண்டும் உயிர் பெற்று இயங்கத் தொடங்கியது. 

பொள்ளாச்சியில் தாய்-சேய் சிகிச்சைக்காக 24 மணி நேரமும் செயல்பட்டு வந்த 102 ஆம்புலன்ஸ் கடந்த சில நாட்களாக செயல்படாமல் இருந்தது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர பெண்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

இது தொடர்பாக "பொள்ளாச்சியில் செயல்படாத 102 ஆம்புலன்ஸ்" சேவை என்ற தலைப்பில் கடந்த 3-ம் தேதி சிம்ப்ளிசிட்டியில் செய்தி வெளியிடப்பட்டது.

இது தமிழ்நாடு அரசின் இலவச தாய்-சேய் சேவை மையத்தின் தொடர்பு அலுவலரிடம் பேசினோம். அவர், "பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் 102 வண்டி பழுதடைந்து உள்ளது. ஓட்டுநர் பற்றாக்குறை காரணமாக தற்போது இந்த சேவை முடங்கிப் போயுள்ளது." என்று முரண்பட்ட கருத்துக்களை கூறினார்.

பின்னர், திட்ட இயக்குநர் ரூபனை தொடர்பு கொண்ட போது, " உடனடியாக மாற்று சேவை வாகனம் அமைத்து மக்களின் தேவையை பூர்த்தி செய்கிறோம்." என்றார். அதேபோல் செய்தி வெளியிட்டு ஓரிரு நாளில் 102 வண்டி செயல்பட தொடங்கியது.



இது குறித்து பொள்ளாச்சியைச் சேர்ந்த பிரபாகரன் கூறுகையில், " 102 வாகனம் ஏழை, எளிய தாய்மார்களின் தேவையைப் பூர்த்தி செய்கிறது. பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள கிராமப்புற தாய்மார்கள் இந்த சேவையை மகிழ்வுடன் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவை ஒரு நாள் செயல்படவில்லை என்றாலும் தாய்மார்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவார்கள். எங்களின் கோரிக்கையை ஏற்று விரைவாக தாய்-சேய் சேவை ஊர்தி சேவையாற்ற தயாரானது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது." என்றார்.



Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....