இந்து அறநிலையத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

திருப்பூரில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் அறநிலையத்துறை அலுவலத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்: திருப்பூரில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் அறநிலையத்துறை அலுவலத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 



திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கே.வி.ஆர். நகர் மற்றும் செல்லம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆண்டுகளாக குடியிருந்து வரும் பொதுமக்களின் குடியிருப்புகள் அறநிலையத்துறைக்கு சொந்தமானது எனவும், ஆக்கிரமிப்பில் உள்ளவர்கள் உடனடியாக காலி செய்யவேண்டும் எனக் கூறி இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தலைமையில் பொதுமக்கள் அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். 

அப்போது, தாங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் பகுதிகளில் குடியிருந்து வருவதாகவும், தற்போது அறநிலையத்துறை நடவடிக்கையால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, இடத்தை தங்களுக்கே கிரயம் செய்து வைக்குமாறு அவர்கள் அரசுக்குக் கோரிக்கையையும் விடுத்தனர். பொதுமக்களுடன் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....