அரசின் சார்பில் உண்டு, உறைவிடப் பள்ளி மாணவர்களுக்கு ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலா

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பின்தங்கிய பழங்குடியினருக்கான உண்டு, உறைவிடப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா இன்று உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தொடங்கியது.

நீலகிரி: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பின்தங்கிய பழங்குடியினருக்கான உண்டு, உறைவிடப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா இன்று உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தொடங்கியது. 



நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்த இந்த சுற்றுலா பயணத்தில் கரிக்கையூர், குஞ்சப்பண்ணை, புத்தூர் வயல், பொண்ணூர், நடுவட்டம், கார்குடி உண்டு உறைவிட பள்ளிகளில் படிக்கும் 150 மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். பின்தங்கிய பகுதிகளில் வாழும் இந்த மாணவர்களுக்கு இயற்கையைப் பாதுகாப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது, சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைப்பது மற்றும் கழிவறைகளை பயன்படுத்துவது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.

இந்த ஒருநாள் சுற்றுலாவின் போது உதகையிலுள்ள அருங்காட்சியகம், ஆளுநர் மாளிகை, தாவரவியல் பூங்கா, பழமை வாய்ந்த கட்டிடங்கள் மற்றும் வானியல் ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிட உள்ளனர். இதுபோன்ற திட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்படுவதாகவும், நீலகிரி மாவட்டத்திற்காக ரூ. 2 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் முரளி தெரிவித்தார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....