மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் சார்பாக மாநகராட்சி ஆணையாளரிடம் மனு

ஆசிரியர் பணி நியமனத்தில் விதிமீறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டி கோவை மாநகராட்சி அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தினர் மாநகராட்சி ஆணையாளரிடம் இன்று மனு அளித்தனர்.

கோவை : ஆசிரியர் பணி நியமனத்தில் விதிமீறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டி கோவை மாநகராட்சி அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தினர் மாநகராட்சி ஆணையாளரிடம் இன்று மனு அளித்தனர்.



முன்னதாக, இது குறித்து கோவை மாநகராட்சி அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தின் கொள்கை விளக்க செயலாளர் ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'கல்வி அலுவலரின் தவறான செயல்பாடுகளால் ஆசிரியர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளோம். சென்ற ஆண்டு தமிழக அரசால் கோவைக்கு வழங்கப்பட்ட 11 புதிய முதுகலை பணியிடங்கள் இன்று வரை நிரப்பப்படவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக கோவை மாநகராட்சியில் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் TRB/TET தேர்வுகள் மூலம் நியமிக்கப்படாமல், அரசு விதிகளை மீறி, பணி மாறுதல் மூலம் மட்டுமே நியக்கமிக்கப்பட்டு வருகின்றனர். 

மேலும், அரசு விதிகளுக்கு புறம்பாக ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது, ஏழு ஆண்டுகளாக மாநகராட்சி பள்ளிகளின் தரம் உயர்த்தப்படுவதற்கு எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் இருப்பது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் கல்வி அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும்' என்றார்.

கல்வி அதிகாரிகளிடம் மனு அளிப்பதற்கு முன்பு, மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கூட்டம் நடைபெற்றது. சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...