கோவையில் ரசிகர்களை சந்திக்காமல் சென்ற கமல்: ரசிகர்கள் ஏமாற்றம்

திருப்பூர் மற்றும் ஈரோட்டில் கட்சித்தொண்டர்களையும் நற்பணி மன்ற நிர்வாகிகளையும் சந்திப்பதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்த கமலஹாசன், விமான தாமதத்தால் அங்கு திரண்டிருந்த ரசிகர்களை சந்திக்காமல் சென்றார்.


கோவை: திருப்பூர் மற்றும் ஈரோட்டில் கட்சித்தொண்டர்களையும் நற்பணி மன்ற நிர்வாகிகளையும் சந்திப்பதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்த கமலஹாசன், விமான தாமதத்தால் அங்கு திரண்டிருந்த ரசிகர்களை சந்திக்காமல் சென்றார்.

திருப்பூர் மற்றும் ஈரோட்டில் கட்சித்தொண்டர்களையும் நற்பணி மன்ற நிர்வாகிகளையும் சந்திப்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார். கமலஹாசன் வந்த விமானம் அரை மணி நேரமாக தாமதமாக வந்ததால், அவர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்காமல் செல்வதாக கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

அப்போது, பத்திரிக்கையாளர்களிடம் கமல் பேசுகையில், நான் வந்திருப்பது நற்பணி மன்ற நண்பர்களையும், கட்சி தோழர்களையும் சந்திப்பதற்காகத்தான். இது பொதுக்கூட்டமோ, மாநாடோ அல்ல, நன்றி வணக்கம். இவ்வாறு கூறினார்.



இதனையடுத்து அவர் அவினாசி அத்திக்கடவு திட்ட குழுவினரை சந்திக்க அவினாசி புறப்பட்டு சென்றார். இந்த பயணத்தின் போது, பெருந்துறை, சித்தோடு பகுதிகளில் ரசிகர்கள் மற்றும் கட்சியினரை சந்தித்துவிட்டு , ஈரோட்டில் மாலை கமலஹாசன் தலைமையில் 2000-க்கும் மேற்பட்டவர்கள் கட்சியில் இணையும் நிகழ்வில் பேசுகிறார். மேலும், இரவு விசைத்தறி உரிமையாளர்களை சந்தித்து பேச உள்ளார்.

கமலஹாசன் பேனர் வைப்பதற்கு போலீசார் அனுமதியளிக்காததை அடுத்து இரண்டு மணி நேரத்திற்கு முன் விமான நிலையத்தில் இருந்து அவினாசி செல்லும் சாலையில் கமலஹாசன் போட்டோ வைத்த பேனர்கள் வைக்கப்பட்டன. 

இதேபோல், ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்கட்சியைச் சார்ந்த தலைவர்கள் வந்தால் அவர்களை விமான நிலைய வாயில் அருகே மேளதாளம் முழங்க வரவேற்பது வழக்கம், ஆனால் கமலஹாசன் வருகையையொட்டி பேண்டு மற்றும் ஜமாப்பை நுழைவு வாயில் வெளியில் போலீசார் அடிக்க விடாமல், உள்ளே வந்தவர்களை தூரத்தி, சாலை ஓரத்தில் அடிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...