காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விட மாட்டோம்: எஸ்.பி.வேலுமணி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விட மாட்டோம் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதியளித்துள்ளார்.

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விட மாட்டோம் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதியளித்துள்ளார்.

தமிழ்நாடு கைத்தறி ஜவுளித்துறை மற்றும் கோவையில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மேலாண்மை கல்லூரி சார்பில் தொழில்நுட்ப ஜவுளி மைய துவக்க விழா அவினாசி சாலையில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது:- இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஜவுளித்துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.

தொழில்நுட்ப ஜவுளி புத்தாக்க முயற்சியை துவங்கி உள்ளதன் மூலம் 13 வகையான புதிய உற்பத்திகளை ஜவுளி துறையில் துவங்க உள்ளது. இது தொழில் புரட்சியை ஏற்படுத்தும். குக்கர் சின்னம் டிடிவி தினகரனுக்கு ஒதுக்கியது நீதிமன்ற உத்தரவு என்பதால் கருத்து கூற கூடாது. காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை அளித்து உள்ளது. சில குறைபாடுகள் இருந்தாலும் விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் 

அமைக்க வேண்டும் என்பது தான் தங்களது கருத்து. விரைவில் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பின்னர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசுகையில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தொடர்ந்து தங்களது எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை முடக்கி உள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். தமிழகத்தின் உரிமையை மீட்டு எடுக்க தொடர்ந்து அ.தி.மு.க. பாடுபட்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விட மாட்டோம்,” என்றார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....