தாராபுரம் அருகே இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது கார் கட்டுபாட்டை இழந்து மோதியது

தாராபுரம் அருகே இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது கார் கட்டுபாட்டை இழந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்ல அலட்சிம் மற்றும் காலதாமத்தால் தாராபுரம் அரசு மருத்துவமனையிலேயே துடிதுடித்து மேலும் ஒருவர் பலி காரில் வந்த இருவர் காயம்


தாராபுரம் அருகே இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது கார் கட்டுபாட்டை இழந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்ல அலட்சிம் மற்றும் காலதாமத்தால் தாராபுரம் அரசு மருத்துவமனையிலேயே துடிதுடித்து மேலும் ஒருவர் பலி காரில் வந்த இருவர் காயம்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோவை சாலையில் உள்ளது ருத்ராவதி கோவையில் இருந்து ஒட்டன்சத்திரம் கொத்தயம் நோக்கி காரில் செந்தில்குமார் மற்றும் பால்ராஜ் ஆகியோர் வந்து கொண்டிருந்தனர் ருத்ராவதி அருகே கார் கட்டுபாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்களின் மீது படு வேகமாக மோதியது இதில் இரு சக்கர வாகணத்தில்  தேனியை நோக்கி சென்று கொண்டிருந்த சுதாகர் மற்றும் முத்து என்ற தங்கபாண்டி மற்றொரு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கணவன் மனைவி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அடையாளம் தெரியாத கணவன் மனைவி மற்றும் சுதாகர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த முத்து என்ற தங்கபாண்டி மற்றும் காரில் வந்த செந்தில்குமார் பால்ராஜ் ஆகியோர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கபட்டு பின்னர் மேல்சிகிச்சைகாக பால்ராஜ் மற்றும் செந்தில்குமார் கோவை கொண்டு செல்லபட்டனர்.  படுகாயமடைந்த முத்து என்ற தங்கபாண்டிமேல்சிகிச்சைக்கு கொன்டு செல்ல அரசு மருத்துவமனையின் அலட்சிய போக்கு மற்றும் காலதாமத்தால் துடிதடித்து இறந்தார். இதில் சுதாகர் காவல்துறை தேர்வு எழுதிவிட்டு கோவையில் இருந்து தேனி திரும்புகையில் விபத்து நடைபெற்றுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வேலுமணி இறந்தவர்களின் உடல்களை பார்வையிட்டு விபத்துகான காரணம் குறித்து ஆய்வுசெய்து வருகின்றனர் இறந்து போன கணவன் மனைவி யார் என்றும் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....