தேனி காட்டுத்தீயில் சிக்கி கோவையை சேர்ந்தவர் பலி

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களில் கோவையைச் சேர்ந்த விபின் தாமோதரன் என்பது தெரிய வந்துள்ளது.

தேனி: தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களில் கோவையைச் சேர்ந்த விபின் தாமோதரன் என்பது தெரிய வந்துள்ளது.

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட டாப்ஸ்டேசன் மலைப்பகுதி உள்ளது. குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. சுற்றுலாவுக்காக இங்கு அதிகம் பேர் வந்து செல்கின்றனர். 

இந்த நிலையில், குரங்கணி வனப்பகுதியில் நேற்று பிடித்த தீயில் சுற்றுலா சென்ற முப்பதுக்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர். மலைப்பகுதியில் சிக்கியுள்ளவர்களை மீட்க போர் கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் உள்பட 27 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.

இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் கோவையை சேர்ந்த விபின் தாமோதரன் என்பவரும் பலியானார். இவர், மலைப்பகுதியில் டிரெக்கிங் செல்ல ஆர்வமுடையவர் என்பதும், தற்போதைய டிரெக்கிங் நிகழ்வை விபின் தாமோதரனும், அருண் பிரபாகரன் என்பவரும் ஒருங்கிணைத்ததுள்ளனர்.



தீ விபத்தில் இருந்து தப்பித்த இவர்கள் இருவரும் மற்றவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட போதே பலியானார்கள் என்று தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் விபத்தில் சிக்கியவர்களின் பெயர் , விவரம், மற்றும் காயத்தில் அளவு ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான விவரங்களைப் பெற ஹெல்ப்லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 94450-00586, 9994793321 இந்த எண்களுக்குத் தொடர்பு கொண்டு மேலும் தகவலை பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது 

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....