கெயில் எரிவாயு திட்டத்திற்கு எதிர்ப்பு : மாதிரி குழாயுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விவசாயிகள்

கெயில் எரிவாயு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாய சங்கத்தினர் மாதிரி குழாயுடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கெயில் எரிவாயு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாய சங்கத்தினர் மாதிரி குழாயுடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கெயில் எரிவாயு திட்டத்தை கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் வழியாகக் கொண்டு செல்ல மத்திய அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனால் தமிழகத்தில் விவசாயம் பாதிக்கப்படும் என்று கூறி விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில், விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்ததை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட குழு உறுப்பினர்கள் கெயில் திட்டத்தின் மாதிரி குழாயுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். 



இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் பழனிச்சாமி கூறுகையில், "தமிழகத்தில் கெயில் எரிவாயு திட்டம் நிறைவேற்றப்பட்டால் பயிர்கள் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்படும். கோவை மக்களின் நீர் ஆதாரம் பாதிக்கப்படும். விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நெடுஞ்சாலை துறை வழியாக கெயில் குழாய்களை கொண்டு செல்லாம். மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்." என்றார். 

மாவட்ட ஆட்சியரிடம் கெயில் திட்டத்தின் மாதிரி குழாயுடன் விவசாயிகள் மனு அளிக்க வந்ததால் அவ்வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....