குடிநீர் தேக்க தொட்டியை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவரக் கோரி மனு

நீலகிரியில் புதியதாக அமைக்கப்பட்ட கிணறு மற்றும் குடிநீர் தேக்க தொட்டியை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி: நீலகிரியில்  புதியதாக அமைக்கப்பட்ட கிணறு மற்றும் குடிநீர் தேக்க தொட்டியை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கக்  கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



உதகையை அடுத்த கெந்தளா கிராமத்தில் சுமார் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் ஏற்ப்பட்ட குடிநீர் பிரச்சனை  காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய கிணறு, குடிநீர் தேக்கத் தொட்டி, பம்பு அறை மற்றும் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. 

பணிகள் நிறைவடைந்து ஓராண்டு காலமாகியும் குடிநீர் விநியோகம் இதுவரை செய்யப்படவில்லை. இது குறித்து பலமுறை அதிகரட்டி பேரூராட்சியில் மனு அளித்தும், பணி முடிந்ததற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை எனக்  கூறி பேரூராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. எனவே, உடனடியாக இது தொடர்பாக  உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் விநியோகம் செய்ய ஆணையை பிறப்பிக்குமாறு கூறி இன்று அக்கிராம மக்கள் 100-க்கும் மேற்ப்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....