திருப்பூரில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் திறப்பு

திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் பகுதியில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் திறக்கப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் பகுதியில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் திறக்கப்பட்டது. 

இந்த விழாவிற்கு மாநில நுகர்வோர் நீதிமன்ற தலைவர் எஸ்.தமிழ்வாணன் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். இதில், மாவட்ட காவல் ஆணையர் பி. நாகராஜன், கோவை மாவட்ட நீதிமன்ற தலைவர் பாலசந்திரன், திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி உட்பட ஏராளமான வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாநில நுகர்வோர் நீதிமன்ற தலைவர் எஸ். தமிழ்வாணன் கூறுகையில், " தமிழகத்தில் 32 மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன. நுகர்வோர் ஒரு பொருளை வாங்கும் போது உள்ள குறைபாடு, அதன் தரம், எம்.ஆர்.பி.ரேட், காலாவதி தேதி உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளன. சமையல் எரிவாயு, எலக்டிரிசிட்டி, ஏற்றுமதி உள்ளிட்ட அனைத்தும் உள்ளடங்கும். இழப்பீடு 1986-ம் ஆண்டு சட்டத்தின்படி மாவட்ட நீதிமன்றத்திற்கு அதிகபட்சம் ரூ. 20 லட்சம் வரையிலும், அதற்கு மேல் ரூ. 1 கோடி வரை மாநில நீதிமன்றத்திற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நுகர்வோர் நீதிமன்றங்கள் இருப்பது நியாயங்கள், நீதி வழங்குவதற்காகத் தான் செயல்படுகின்றது." எனத் தெரிவித்தார்.



Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....