பல்லுயிர் மற்றும் பாதுகாப்பு கருத்தரங்கின் தேசிய பத்திரிக்கை வெளியீடு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற "பல்லுயிர் மற்றும் அதன் பாதுகாப்பு" கருத்தரங்கு குறித்த தேசிய பத்திரிக்கை வெளியிடப்பட்டது.


கோவை : கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற "பல்லுயிர் மற்றும் அதன் பாதுகாப்பு" கருத்தரங்கு குறித்த தேசிய பத்திரிக்கை வெளியிடப்பட்டது. 

மண்வளம், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மையில் அவற்றின் முக்கியத்துவம் பற்றி நடைபெற்று வரும் நிகழ்கால ஆராய்ச்சிகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து அறிவியல் மாணவர்கள் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக "பல்லுயிர் மற்றும் அதன் பாதுகாப்பு" என்ற தலைப்பில் இரண்டு நாள் விரிவுரை கருத்தரங்கம் இன்று தொடங்கியது. உஷா கீர்த்திலால் மேத்தா கலையரங்கில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில், பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் ஆர். சரவண செல்வன், "பல்லுயிர் மற்றும் அதன் பாதுகாப்பு" கருத்தரங்கின் தேசிய பத்திரிக்கையை வெளியிட்டார். அதனை சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் மதிவாணன் பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் ஆர். சரவண செல்வன் ஃபைட்டோஸ்பெக்ட்ரம் இதழை வெளியிட்டார். 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...