வெள்ளலுார் குப்பை கிடங்கு தீ விபத்து: உதவி பொறியாளர் 'சஸ்பெண்ட்'

வெள்ளலுார் குப்பை கிடங்கில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் தீ விபத்துகளை கண்காணிக்க தவறியதாக மாநகராட்சி உதவி பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


கோவை: வெள்ளலுார் குப்பை கிடங்கில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் தீ விபத்துகளை கண்காணிக்க தவறியதாக மாநகராட்சி உதவி பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள், மறு சுழற்சிக்காக வெள்ளலுார் குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு கொட்டப்படுகிறது. சுமார் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குப்பை கிடங்கில், 250 ஏக்கர் அளவிற்கு குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. மலைபோல் தேங்கியுள்ள குப்பைகளால், சுற்றுச்சூழல் மாசு அடைந்திருப்பதோடு, நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்து வருகிறது. 

சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுகாதாரமற்ற சூழலை உருவாக்கி வரும் இந்த குப்பைக் கிடங்கில் அவ்வப்போது தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் பூண்டதோடு, அங்கு வாழும் மக்களுக்கு மூச்சுத் திணறல் போன்ற உபாதைகள் ஏற்பட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியது. இதனால், குழந்தைகள் முதல் முதியவர் வரை மூச்சு திணறல், ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக் கிழமை சிம்பிளிசிட்டி சிறப்பு செய்தி தொகுப்பு ஒன்றினை வெளியிட்டது. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதோடு, வெள்ளலூர் குப்பைக்கிடங்கு விவகாரத்தில் மாநகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

தேங்கியுள்ள குப்பையின் அளவைக் குறைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் தீ பற்ற வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நகர பொறியாளர் நடராஜன் தலைமையிலான குழு ஒன்றை அமைத்து, தீ விபத்து தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டார்.

இந்தக் குழுவில் மாநகராட்சிக் கண்காணிப்புப் பொறியாளர் என்.நடராஜன், செயற்பொறியாளர் லட்சுமணன், கிழக்கு மண்டல செயற்பொறியாளர் வி.பார்வதி, செயற்பொறியாளர் ஞானவேல், மாநகர நகர் நல அலுவலர் டாக்டர்.சந்தோஷ்குமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த குழுவினர் தீ விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது.

இதையடுத்து குப்பை கிடங்கை முறையாக கண்காணிக்க தவறியதாக, மேற்கு மண்டல உதவி பொறியாளர் மூர்த்தியை நேற்று முதல் பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பொறுப்பாளர் ரவிக்கண்ணன், நிர்வாக பொறியாளர் சரவணக்குமார் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...