உதகை தாவரவியல் பூங்காவில் 'செல்பி ஸ்பாட்' ஏற்பாடு

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக 'செல்பி ஸ்பாட்' அமைக்கப்பட்டுள்ளது

நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக 'செல்பி ஸ்பாட்' அமைக்கப்பட்டுள்ளது.

கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் நீலகிரி மாவட்டத்திற்கு அதிக அளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க அம்மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், உதகையில் அமைந்துள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 'செல்பி ஸ்பாட்' அமைக்கப்பட்டுள்ளது. 



தற்போது கோடை சீசனை வரவேற்கும் வகையில் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர்களைக் காண முடியாமல் ஏமாற்றத்துடன் சென்று விடுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பூங்கா வளாகத்தில் உள்ள இந்திய வரை படம் அருகே பல்வேறு மலர்கள் அடங்கிய மலர் தொட்டிகள் அடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நின்று சுற்றுலாப்பயணிகள் செல்பி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பூங்கா நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...