குரங்கணி தீவிபத்தில் படுகாயமடைந்த இளம்பெண் உயிரிழப்பு : பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

தேனி மாவட்டம் குரங்கணி தீவிபத்தில் படுகாயமடைந்த ஈரோட்டைச் சேர்ந்த இளம்பெண் சிகிச்சை பலினின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டம் குரங்கணி தீவிபத்தில் படுகாயமடைந்த ஈரோட்டைச் சேர்ந்த இளம்பெண் சிகிச்சை பலினின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

போடி அருகே குரங்கணி காட்டுப் பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் காட்டுத்தீயில் சிக்கினர். இவர்களில், ஆறு பெண்கள் உட்பட 10 பேர் பலியாகினர். 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மாவட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்த திவ்யா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

மதுரை அரசு மருத்துவமனையில் ஆறுதல் கூறிய பின்னர் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "3 பேருக்கு 40 சதவீதத்திற்கு குறைவான காயம் ஏற்பட்டது. 13 பேருக்கு 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க 33 பேர் கொண்ட மருத்துவ குழு செயல்படுகிறது. 74 செவிலியர்கள் சிகிச்சை பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்," எனத் தெரிவித்தார். இந்நிலையில், மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்களைக் கண்காணிக்க தவறியதாக வனவர் ஜெய்சிங் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடேயே, மதுரைக்கு சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...