ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் - ஜவாஹிருல்லா

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 161 பிரிவின் கீழ் தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.


கோவை: இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 161 பிரிவின் கீழ் தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

கோவை மத்திய சிறையில் உள்ள சிறை கைதிகளை சந்திக்க மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹருல்லா இன்று கோவை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- 

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் 10 ஆண்டுகளாக சிறையில் உள்ள கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில், விடுதலையை எதிர்பார்த்து இருந்த நிலையில் ரிஸ்வான் என்பவர் நேற்று முன் தினம் மரணமடைந்தார். இதற்கு தமிழக அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். ரிஸ்வானின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கி அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும். மேலும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கோவை மத்திய சிறையில் இரண்டு பேர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளனர். மேலும், இருவர் மன உளைச்சல் காரணமாக மரணித்துள்ளனர். மத்திய சிறையில் கைதிகளுக்கு தரமான மருத்துவ வசதி மட்டுமல்லாமல் கைதிகள் மன உளைச்சல் ஏற்படாமல் இருக்க உளவியல் ரீதியான சிகிச்சை அளிக்கப் பட வேண்டும். குற்றவாளிகள் எந்த வழக்கில் தண்டிக்கப் பட்டுள்ளார்கள் என்பதை கடந்து பாரபட்சம் பாராமல் விடுதலை செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...