என்னையும் கமலஹாசனின் கட்சியில் சேர்த்துவிட்டனர் - தமிழிசை சவுந்திரராஜன்

மக்கள் நீதி மய்யத்தில் இணைக்க தனக்கும் மின்னஞ்சல் வந்ததாக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: மக்கள் நீதி மய்யத்தில் இணைக்க தனக்கும் மின்னஞ்சல் வந்ததாக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். 

திருப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க.வின் செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கட்சிக்கு உறுப்பினர்களை சேர்ப்பதாக நடிகர் கமலஹாசன் கிடைக்கும் மின்னஞ்சலுக்கெல்லாம் அழைப்பு விடுக்கிறார். அந்த கட்சியில் இருந்து எனக்கும் அழைப்பு மின்னஞ்சல் வந்தது வேடிக்கையாக உள்ளது. 

தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது உண்மைதான். ஆனால், அதனை நடிகர்களால் நிரப்ப முடியாது. 22 மாநிலங்களில் ஆளுகின்ற பா.ஜ.க. மட்டுமே தமிழகத்தின் மாற்றாக அமைய முடியும். தமிழகத்தில் பா.ஜ.க. வேகமாக வளர்ந்து வருகிறது. எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார். திரைப்படத்துறை தற்போது முடங்கியுள்ள நிலையில் அவற்றை மீட்டு வர முடியாதவர்கள் எப்படி தமிழகத்தை மீட்கப் போகிறார்கள். 

தேனியில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தில் மத்திய அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டது. அதனையும் தமிழகத்தில் சில கட்சிகள் விமர்சிப்பது வேதனையளிக்கிறது. இலங்கையில் தமிழின மக்கள் கொல்லப்பட்ட போது வராத ராகுல்காந்தி தற்போது அரசியலுக்காக ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை மன்னித்து விட்டதாக நாடகமாடுகின்றார்." என்று அவர் பேசினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...