உரிய அனுமதி பெற்றே பிறகே டிரெக்கிங் சென்றோம் : சென்னை டிரெக்கிங் கிளப் விளக்கம்

வனத்துறையிடம் உரிய அனுமதி பெற்றுதான் மலையேற்றம் சென்றதாக சென்னை டிரெக்கிங் கிளப் விளக்கம் அளித்துள்ளது.

வனத்துறையிடம் உரிய அனுமதி பெற்றுதான் மலையேற்றம் சென்றதாக சென்னை டிரெக்கிங் கிளப் விளக்கம் அளித்துள்ளது. 

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட டாப்ஸ்டேசன் மலைப்பகுதி உள்ளது. குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. சுற்றுலாவுக்காக இங்கு அதிகம் பேர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் குரங்கணி வனப்பகுதியில் பிடித்த காட்டுத் தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். வனப்பகுதியில் சிக்கியவர்களை மீட்கப் போர் கால அடிப்படையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்தவர்கள் மதுரையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, உரிய அனுமதியின்றி டிரெக்கிங் சென்றதாக புகார் எழுந்தது. இந்த தீ விபத்து ஏற்பட்டதும், டிரெக்கிங் குழுவை ஒருங்கிணைத்த நிறுவன உரிமையாளர் பீட்டர் தலைமறைவானார். குரங்கணி தீ விபத்து குறித்து உரிய விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. 

இந்த நிலையில், சென்னை டிரெக்கிங் கிளப் தரப்பில் விளக்க அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. டிரெக்கிங் கிளப் நிறுவன முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- ”குரங்கணி வனப்பகுதிக்குள் சென்ற போது அங்குக் காட்டுத்தீக்கான அறிகுறி எதுவும் இல்லை. வனத்துறைக்கு கட்டணம் செலுத்தி அனுமதிச்சீட்டு பெற்றுதான் குரங்கணி வனப்பகுதியில் டிரெக்கிங் சென்றோம். வழிகாட்டிகள் அருண், விபின் ஆகியோர் டிரெக்கிங்கில் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள்.

குரங்கணி மலை அடிவாரத்தில், பருவகால சாகுபடிக்காக புற்களை விவசாயிகள் தீ வைத்து எரிப்பதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம். குரங்கணி முதல் கொழுக்கு மலை வரை மலையேற்றம் செல்வது வழக்கமானது. போடி பள்ளத்தாக்கில் வழக்கத்தை விடக் காற்று அதிகமாக வீசியதால் தீ மளமளவெனப் பரவியது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...