வறண்டு வரும் நீராதாரங்கள் : நீர் நிலைகளைத் தேடும் பறவைகள்

மேட்டுப்பாளையம் பகுதிகளில் வறண்டு வரும் நீராதாரங்களால் பறவையினங்கள் நீர் நிலைகளைத் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை: மேட்டுப்பாளையம் பகுதிகளில் வறண்டு வரும் நீராதாரங்களால் பறவையினங்கள் நீர் நிலைகளைத் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை அதிகாரப்பூர்வமாக 525 பறவையினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பல வகை பறவைகள் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் பகுதிக்கு வந்து தங்கிச் செல்கின்றன. 

மேட்டுப்பாளையத்தில் உள்ள பசுமை சூழ்ந்த காட்டாற்று படுகைகள், நீர் தேக்கங்கள் மற்றும் குட்டைகளில் இவை ஆயிரக்கணக்கில் காணப்படும். குறிப்பாக சர்வதேச இயற்கை பாதுகாப்பு கழகத்தால் (ஐ.யு.சி.என்) அழிவு நிலையில் உள்ள பறவையாக அறிவிக்கப்பட்டுள்ள 'பாம்புதாரா' என்னும் நீர்ப்பறவைகளை இப்பகுதியில் காணலாம். பாம்பு போல் வளைந்து நெளிந்து காணப்படும் நீண்ட கழுத்தை கொண்ட பாம்புதாரா பறவைகள் மீன்களை உணவாகக் கொள்ளும். இதே போல் நீர் காக்கைகள், கொக்குகள், நாரைகள், அருவாமூக்கன் போன்ற உள்நாட்டுப் பறவைகள் மட்டுமின்றி பல்வேறு அரிய வகை வெளிநாட்டு பறவையினங்களையும் இங்கு காண இயலும். 

ஆனால், கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் போதிய மழை பெய்யாமல் பொய்த்துப் போனதால் பல்லாண்டுகளாக பறவைகளை ஈர்த்த பல்வேறு நீர்நிலைகள் தற்போது வறண்டு கிடக்கின்றன. இதனால், தற்போது ஓரளவு நீருடன் காணப்படும் லிங்காபுரம் நீர்த்தேக்க பகுதி மற்றும் பெள்ளாதி குட்டை போன்ற இடங்களுக்கு பறவைகள் படையெடுக்கின்றன. ஏராளமான பறவைகள் அந்த நீர் நிலைகளில் இருக்கும் குறைந்த நீரில் உணவைத் தேடுகின்றன. விரைவில் கோடை மழை பெய்யாவிட்டால் இந்த நீராதாரங்களும் வறண்டு பறவைகளின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் அச்சமாக உள்ளது.​

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....