தொழில் பயிற்சி குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்ள பழங்குடி மக்களுக்கு அழைப்பு

தொழில் நிறுவன மைய திறன் பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொள்ள தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு கோவை மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

கோவை: தொழில் நிறுவன மைய திறன் பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொள்ள தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு கோவை மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. 

இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- 

பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான தொழில் நிறுவன மைய திறன் பயிற்சி கருத்தரங்கு வரும் 14-ம் தேதி காலை 10.00 மணியளவில் அவினாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான தொழில் நிறுவன மையம், சிறப்பு பிரிவினரை ஊக்குவிக்கும் ஒரு அருமையான சுற்றுச்சூழலை உருவாக்கித் தருகிறது. 

இந்த மையத்தின் மூலம் சிறப்பு பிரிவினரின் தொழில் திறன் மேம்படுத்தப்பட்டு, பொது கொள்முதல் செயல்முறைகளில் திறம்பட பங்கேற்க உதவுகிறது. எனவே, இந்த பயிற்சி கூட்டரங்கில் கலந்து கொண்டு, வாய்ப்புகளைப் பயன்படுத்தி, தொழில்களைத் துவங்கி, அரசு திட்டங்களின் வாயிலாக பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....