தூய்மை இந்தியா திட்டம் : கோவையைச் சேர்ந்த அமைப்பிற்கு பிரதமர் விருது

கழிவு மேலாண்மையில் சிறந்து விளங்கிய கோவையைச் சேர்ந்த 'நோ டம்பிங்' என்ற அமைப்பிற்கு மத்திய அரசின் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

கோவை : கழிவு மேலாண்மையில் சிறந்து விளங்கிய கோவையைச் சேர்ந்த 'நோ டம்பிங்' என்ற அமைப்பிற்கு மத்திய அரசின் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 

கடந்த 2016-ம் ஆண்டு 'நோ டம்பிங்' என்ற சமூக சேவைக்கான அமைப்பை கோவையைச் சேர்ந்த பிரசாந்த், சரண்ராஜ் மற்றும் சுரேஷ் பண்டாரி ஆகியோர் உருவாக்கினர். இவர்கள், இந்த அமைப்பின் மூலம் கோவை மாநகராட்சிக்கு கழிவு மேலாண்மையின் மூலம் உதவி வருகின்றனர். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்புகளில் சேரும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து நகரை தூய்மைப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறந்து விளங்கிய 'நோ டம்பிங்' அமைப்பிற்கு பிரதமர் விருது வழங்கப்பட்டது. 

'நோ டம்பிங்' அமைப்பின் மூலம் தற்போது கோவையில் நாள்தோறும் 43 குடியிருப்பு நலச் சங்கங்கள், 4,200-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் விமானநிலையம் போன்ற இடங்களில் இருந்து 5 டன்னிற்கும் மேலான குப்பைகள் பிரித்தெடுக்கப்படுகிறது. 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...