கோவையில் மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

கோவையை அடுத்த மத்திபாளையம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்தது.

கோவை: கோவையை அடுத்த மத்திபாளையம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்தது.

மதுக்கரை வனச் சரகத்திற்கு உட்பட்ட மத்திபாளையம் பகுதியில் சந்திரன் என்பவருக்குச் சொந்தமான பண்ணை ஒன்று உள்ளது. அந்த பண்ணையில் சூரிய ஒளியில் இயங்கும் மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது. வன விலங்குகள் பண்ணைக்குள் புகுந்துவிடாமல் இருப்பதற்காக அந்த மின் வேலி அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது.



இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்போது, வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்ததாக தகவல் விடுத்தும் அதை விரட்ட வனத்துறையினர் கால தாமதமாக வந்ததாகக் கூறி அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இதனைத் தொடர்ந்து, கால்நடைத் துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த யானையை உடற்கூறு ஆய்விற்காக எடுத்துச் சென்றனர். யானை உயிரிழப்புக்குக் காரணமான பண்ணை உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....