+1 மாணவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம்: பொதுத்தேர்வு எழுதச் சென்றபோது பரிதாபம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அரசு பேருந்து மோதியதில் இரண்டு சக்கர வாகனத்தில் +1 தேர்வு எழுதச் சென்ற மூன்று மாணவர்கள் படுகாயமடைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அரசு பேருந்து மோதியதில் இரண்டு சக்கர வாகனத்தில் +1 தேர்வு எழுதச் சென்ற மூன்று மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரனேஷ். அரசுப் பள்ளி ஒன்றில் +1 படித்து வருகிறார். பொதுத்தேர்வு நடைபெறுவதால் இவர், தனது நண்பர்களான கவின் மற்றும் கண்ணன் என்பவர்களுடன் தாராபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கரூரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. 



தொடர்ந்து, பேருந்து ஓட்டுநர் விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறி பள்ளி மாணவர்கள் பேருந்தின் கண்ணாடியை கற்களால் அடித்து நொறுக்கினர். மேலும், படுகாயம் அடைந்த மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...