சி.பி.எஸ்.சி. பள்ளிகளை மூட வலியுறுத்தி த.பெ.தி.க., வி.சி.க.,வினர் ஆர்ப்பாட்டம்

வர்ணாசாரத்தையும், சாதி வேறுபாட்டையும் பள்ளி மாணவர்கள் மனதில் புகுத்தும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளை மூட வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை : வர்ணாசாரத்தையும், சாதி வேறுபாட்டையும் பள்ளி மாணவர்கள் மனதில் புகுத்தும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளை மூட வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



கோவை தெற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வர்ணாசாரத்தையும், சாதி வேறுபாட்டையும் பள்ளி மாணவர்கள் மனதில் புகுத்தும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கு.ராமகிருட்டிணன் கலந்து கொண்டார். 

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசு நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தொடர்ந்து சாதி, மத வேறுபாடுகளையும் விஷ கருத்துகளையும் மாணவர்களிடையே விதைக்கின்ற பாடத்திட்டங்களையும், கேள்விகளையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் 6-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வி தாளில் வர்ணாசரமத்தில் இழிவான சாதி, பிராமணர்கள், சத்திரியர்கள், சூத்திரர்கள் என வினா எழுப்பப்பட்டு இதில் இழிவானவர்கள் யார் என கேட்கப்பட்டிருப்பது ஜாதி வேறுபாட்டை குழந்தைகளின் மனதில் புகுத்தும் விதமாக கேட்கப்பட்டு இருப்பது மாணவர் பருவத்திலேயே ஜாதிய வன்கொடுமையைத் தூண்டும் விதமாக அமைத்திட வழிவகுத்துவிடும். 

கடந்த காலங்களிலும் இதுபோன்று இழிவாக எழுதியுள்ளது. அதனை எதிர்த்து அந்த சமூகத்தினர் போராடி வருகின்றனர். அம்பேத்கரை நேரு சாட்டையால் அடிப்பது போல சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஒரு படத்தை வெளியிட்டு அதறக்கான காரணத்தையும் விளக்கி உள்ளனர். அதில், அம்பேத்கர் எழுதிய சட்டம் தவறாக இருப்பதாகவும், அதற்காக நேரு சவுக்கால் அடிப்பது போல படத்தை வெளியிட்டு இருப்பது கண்டனத்திற்கு உரியது. இவை அனைத்தும் தலைவர்களையும், சமூகத்தையும் இழிவுப்படுத்தி நாட்டை கூறுபோட மத்தியில் ஆளும் பா.ஜ.க. சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் வர்ணாசரம திட்ட கொள்கைகளை புகுத்தும் இந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்து இதுபோன்ற விஷ கருத்துகள் பரப்புகின்ற பள்ளிகளை மூட வேண்டும். புதிதாக தமிழகத்தில் சி.பி.எஸ்.இ பள்ளிகள் துவங்க அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...