மஞ்சூர் பகுதியில் அரசு மதுபான கடை அமைக்க வியாபாரிகள் கோரிக்கை

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக் கோரி அப்பகுதி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக் கோரி அப்பகுதி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 



இது தொடர்பாக அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- 

குந்தா தாலூக்காவின் மிக முக்கிய வியாபார ஸ்தலமாக இருப்பது மஞ்சூர். இப்பகுதியைச் சுற்றி 30,000 பேருக்கு மேல் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்ற தேசிய நெடுஞ்சாலையில்  உள்ள மதுபான கடைகளை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, மாவட்டத்தின் பல பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த மதுபான கடைகள் அகற்றப்பட்டன. 

குறிப்பாக மஞ்சூர் பகுதியில் இருந்த இரண்டு மதுபான கடைகளும் அகற்றப்பட்டன. இதனால், இப்பகுதியில் இருப்பவர்கள் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்குச் சென்று மது பானங்களை வாங்கி வரும் நிலை ஏற்பட்டது. மேலும், இப்பகுதியில் உள்ள வியாபார நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு வருகிறது.



நீலகிரிக்கு, அண்டை மாநிலங்களில் இருந்து சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளுக்கு மது பானங்கள் கிடைக்காததால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகையும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா விடுதிகள் நடத்தி வருபவர்கள் மற்றும் உணவு விடுதி நடத்தி வருபவர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மஞ்சூர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும். 

இவ்வாறு அந்த மனுவில்  கூறப்பட்டுள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...