தமிழகத்தைத் தொடர்ந்து ஆந்திராவிற்கு குறி வைக்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி தமிழகத்தில் என்ன செய்கிறாரோ, அதையே ஆந்திராவிலும் செய்ய முயற்சிப்பதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தமிழகத்தில் என்ன செய்கிறாரோ, அதையே ஆந்திராவிலும் செய்ய முயற்சிப்பதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். 

ஆந்திராவில் ஆட்சி செய்து வரும் தெலுங்கு தேசக் கட்சி அண்மையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியது. இதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ராஜினாமா செய்தனர். இந்த நிலையில், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொலைபேசியில் வாயிலாக கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடி தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ, அதனையே ஆந்திர மாநிலத்திலும் செய்ய முயற்சிக்கிறார். ஆந்திர மாநிலத்திற்கு என்ன சலுகைகள் வழங்க முடியுமோ, அதனை வழங்கவே தாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் பவன் கல்யாணையும் வைத்து தங்களுக்கு எதிராக திசை திருப்பும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் மோடிக்கு எதிராக அலைவீசுகிறது. சமீபத்தில், உத்தரபிரதேசத்திலும், பீகாரிலும் இடைத்தேர்தலில் பா.ஜ.க., தோல்வி அடைந்தது அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இவ்வாறு அவர் பேசினார். 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...