சீரமைக்காத சாலையை சொந்த செலவில் சீரமைக்கும் கிராம மக்கள்

நீலகிரி மாவட்டத்தில் நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், சீரமைக்காத சாலையை சொந்த செலவில் கிராம மக்கள் சீரமைத்து வருகின்றனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், சீரமைக்காத சாலையை சொந்த செலவில் கிராம மக்கள் சீரமைத்து வருகின்றனர். 



உதகையை அடுத்த கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட அட்டுகொலை கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு இவர்கள் உதகை, குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சிறிய சாலை மூலம் சென்று வந்தனர். பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த சாலையின் வழியாக தான் செல்ல வேண்டும். மேலும், இவர்கள் இறந்தவர்களின் உடல்களை இந்த சாலை வழியாகத் தான் எடுத்து செல்ல வேண்டும். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பெய்த கனமழையால் இந்த சாலை முற்றிலும் சேதமடைந்தது. 

இதனைத் தொடர்ந்து, சாலையை சீரமைக்கக் கோரி மாவட்ட நிர்வாகம் மற்றும் கேத்தி பேரூராட்சியில் இப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தனர். விரைவில் சாலை சீரமைக்கப்படும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் சாலை சேதமடைந்து 2 ஆண்டு காலமாகி இதுவரையும் இந்த சாலையை சீரமைப்பதற்கான எந்தவிதமான பணிகளையும் மேற்கொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டு வந்தனர். இதனால், இக்கிராம மக்கள் கடும் அதிருப்தியடைந்தனர். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் இறந்தவரின் உடலை இந்த சாலை வழியாக எடுத்து வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதேபோல, அவசர சிகிச்சைக்காக எந்தவிதமான வாகனங்களை இந்த சாலையில் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



இதனையடுத்து, அரசின் உதவியை எதிர்பாராமல், தாங்களே சொந்த செலவில் சாலையை சீரமைப்போம் என முடிவெடுத்து அக்கிராம மக்கள் நிதியை திரட்டியுள்ளனர். இந்த நிதியைக் கொண்டு இன்று சேதமடைந்த சாலையை சிமெண்ட் சாலையாக மாற்றும் பணியை தொடங்கியுள்ளனர். இவர்கள் சாலையை சீரமைக்கும் பணியை கண்ட அதிகாரிகள் சாலை சீரமைப்பை நிறுத்துமாறு கேட்டுள்ளனர். சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கான உத்தரவு கேத்தி பேரூராட்சியில் இருக்கிறது என கூறியுள்ளனர். ஆனால், கேத்தி பேரூராட்சியில் இந்த சாலையை சீரமைக்க நிதி வழங்கப்படவில்லை என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இவர்கள் மீண்டும் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...