கோவையில் இடி தாக்கியதில் பெண் பலி

கோவை மாவட்டம் மதுக்கரை தாலுகாவில் உள்ள திருமாலையம்பாளையத்தில் சித்ரா என்ற பெண்ணின் மீது இடி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை தாலுகாவில் உள்ள திருமாலையம்பாளையத்தில் சித்ரா என்ற பெண்ணின் மீது இடி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 3 நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. மதுக்கரையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது. 

இந்த நிலையில், திருமாலையாயம்பாளையம் ரொட்டி கவுண்டன் புதூர் கிராமைத்தை சேர்ந்தவர் ஆறுச்சாமியின் மனைவி சித்ரா(38) நேற்று இரவு சுமார் 7:30 மணி அளவில் தோட்டம் ஒன்றில் பணி புரிந்து கொண்டிருந்தார். 



அப்போது தோட்டத்தில் இடி விழுந்தது. இந்த விபத்தில் சித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, தகவலறிந்த க.க.சாவடி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உயிரிழந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.

இடி விழுந்ததில் பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை பீதியடையச் செய்துள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...