அறநிலையத்துறையைக் கண்டித்து அனைத்து கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்

திருப்பூரில் கோவில் இடம் எனக் கூறி குடியிருப்புகளை அகற்றக் கோரிய அறநிலையத் துறையினை கண்டித்து பொதுமக்கள் மற்றும் அனைத்துக்கட்சியின் சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூரில் கோவில் இடம் எனக் கூறி குடியிருப்புகளை அகற்றக் கோரிய அறநிலையத் துறையினை கண்டித்து பொதுமக்கள் மற்றும் அனைத்துக்கட்சியின் சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மங்களம் சாலையில் உள்ள கருவம்பாளையம், பாரப்பாளையம் ஆகிய இடங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதிகள் கோவில் இடம் எனக் கூறி, அங்குள்ளவர்களை உடனடியாக காலி செய்ய வலியுறுத்தி அறநிலையத்துறை சார்பில் கடந்த மாதம் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் பெற்றுக் குடியிருப்புகளை கட்டியுள்ள தங்களை, கோவில் இடம் எனக்கூறி காலி செய்ய சொல்வதாகவும், தங்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அறநிலையத்துறையின் முடிவை வாபஸ் பெற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் மனு அளித்திருந்தனர். 

இந்த நிலையில், அந்த மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தி.மு.க., கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சியினர் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கருவம்பாளையம் பகுதியில் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்காவிட்டால் இனி தொடர் போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...