காதல் மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை

கோவையில் கடந்த 2017-ம் ஆண்டு காதல் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை: கோவையில் கடந்த 2017-ம் ஆண்டு காதல் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

சிறுமுகை பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் மகன் உதயகுமார் (23). தனது தங்கையின் தோழியான அதே பகுதியை சேர்ந்த ஆனந்தியை கடந்த 2016-ம் ஆண்டு சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் வைத்து காதல் திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்குப் பின்னர் குடும்ப செலவிற்கு பணம் தராமல் குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கூறியும், அதனை மறுத்த ஆனந்தியை கொலை செய்யும் முயற்சியும் நடந்துள்ளது. 

இதனிடையே, தனியாக வசித்து வந்த உதயக்குமார் கடந்த 2017-ம் ஆண்டு சிறுமுகை அருகே பேருந்தில் வைத்து மனைவி ஆனந்தியை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக, உதயக்குமாரை கைது செய்த மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை முடிவுற்ற நிலையில், குற்றவாளி உதயகுமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1000 அபராதம் விதித்து கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...