இம்மாத இறுதிவரை உள்ள சனி, ஞாயிறு கிழமைகளில் வரி வசூல் மையங்கள் செயல்படும்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட வரிவசூல் மையங்கள் இந்த மாத இறுதி வரை உள்ள சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும் என மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட வரிவசூல் மையங்கள் இந்த மாத இறுதி வரை உள்ள சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும் என மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக மாநகாட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பு (2017-18-ம்) நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான காலத்திற்கு மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து நிலுவைகளையும் செலுத்த ஏதுவாக மாநகராட்சி வரி வசூல் மையங்கள் அனைத்து வேலை நாட்களிலும் மாலை 5.00 மணி வரை செயல்பட்டு வருகின்றன. மேலும், பொதுமக்களின் நலன் கருதி, மார்ச் 31 வரையுள்ள அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாநகராட்சியின் அனைத்து வரி வசூல் மையங்களும் வழக்கம் போல் செயல்படும். 

எனவே, இந்த வசதியினை முழுமையாகப் பயன்படுத்தி மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் சொத்துவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் நிலுவை வைத்துள்ள வரிதாரர்கள் உடனடியாக நிலுவைத் தொகைகளை செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்பு தருமாறும், குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளைத் தவிர்த்து மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...