உதகையில் குதிரை பந்தய மைதானத்தை சீரமைக்கும் பணி தீவிரம்

கோடை சீசனை முன்னிட்டு உதகை குதிரை பந்தய மைதானத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நீலகிரி : கோடை சீசனை முன்னிட்டு உதகை குதிரை பந்தய மைதானத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது அவர்களின் சிறந்த சுற்றுலாத்தலமாக உதகை விளங்கியது. அவர்களே அங்கு குதிரை பந்தயத்தை ஆரம்பித்தனர். அன்று முதல், ஆண்டு தோறும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று உதகையில் குதிரை பந்தயம் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை மொத்தம் 30 நாட்கள் இந்த குதிரை பந்தயம் நடைபெறும். இதில் நீலகிரி டர்பி, நீலகிரி தங்க கோப்பை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. கோடை காலத்தில் நடைபெறும் இந்த குதிரை பந்தயத்தை உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் கண்டு ரசித்துச் செல்வார்கள்.



அதன்படி, நடப்பு ஆண்டு கோடை கால சீசனை முன்னிட்டு நடைபெற இருக்கும் குதிரை பந்தயத்திற்காக உதகை குதிரை பந்தய மைதானத்தை சீரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. குதிரைகள் ஓடு தளத்தில் உள்ள பசுமையான புற்கள் சமமான அளவில் வெட்டப்பட்டு, அவற்றிற்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வளர்க்கப்படுகிறது. 

இந்த குதிரை பந்தயத்தில் சென்னை, பெங்களூர் மற்றும் மும்பை போன்ற பல்வேறு நகரங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்க உள்ளன. குதிரைகள் மற்றும் அதன் பராமரிப்பாளர்கள் தங்குவதற்காக கொட்டகைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. குதிரை பந்தய மைதானத்தை முற்றிலும் கண்காணிக்க வசதியாக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகிறது. மைதானத்தில் சுற்றுலா பயணிகள் அமர்வதற்கு வசதியாக உள்ள இருக்கைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. பணிகள் நிறைவடைந்ததும் இம்மாதம் இறுதியில் உதகைக்கு குதிரைகள் வரத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...