கூட்டணி முறிவு : பா.ஜ.க.வுக்கு டாட்டா காட்டிய ஆந்திரா

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து மத்திய பா.ஜ.க.வின் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து மத்திய பா.ஜ.க.வின் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது.

ஆந்திரா, தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். 

ஆனால், இந்த விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி முறையாக பதில் அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. மேலும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சிறப்பு நிதி வழங்குவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியுற்றது. இதனால், அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசம் கட்சியின் இரண்டு எம்.பி.க்கள் ராஜிநாமா செய்வதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை ஆந்திரா முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு தங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்.பி.க்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்கு பின்னர் பா.ஜ.க.வின் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகுவதாக அதிரடியாக தெரிவித்தார். மேலும், பிரதமா் மோடி தலைமையிலான அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவதால் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...