பொள்ளாச்சி அருகே இரண்டு அரசு பேருந்துகளின் பந்தயத்தால் பலியான சிறுமி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இரண்டு அரசு பேருந்துகள் போட்டி போட்டு கொண்டு சென்ற போது, எதிரில் வந்த மற்றொரு அரசு பேருந்தின் மீது மோதியதில் சிறுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இரண்டு அரசு பேருந்துகள் போட்டி போட்டு கொண்டு சென்ற போது, எதிரில் வந்த மற்றொரு அரசு பேருந்தின் மீது மோதியதில் சிறுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 



பொள்ளாச்சியில் இருந்து வால்பாறையை அடுத்த புதுக்காடு பகுதிக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அங்கலகுறிச்சி அருகே சென்று கொண்டிருந்த போது பழநியில் இருந்து வால்பாறைக்கு சென்ற அரசு பேருந்துடன் போட்டி போட்டு சென்று உள்ளது. 

ஆழியாறு ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த புதுக்காடு செல்லும் பேருந்து வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த அரசு பேருந்து மீது மோதியது. இதில் அட்டக்கட்டியை சேர்ந்த மோனிகா (14) என்ற சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 



மேலும், வால்பாறையை சேர்ந்த கல்லூரி மாணவன் கார்த்தி (19), சிங்காரவேல் (40), வெங்கடேசன் (18), புருஷோத்தமன் (19) மற்றும் முனியாண்டி (32) ஆகியோர் படுகாயமடைந்தனர். 

இந்த விபத்து குறித்து தகவலறிந்த ஆழியார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...